×

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசம், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் நிலவக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 3 சே.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், சாத்தனுர் அணை, ஊத்தங்கரை, கொளப்பாக்கம், சோலையார், திருப்பத்தூர், மேலாளத்தூர், நாட்ராம்பள்ளி, எமரால்டு, பெரியார் பகுதிகளில் தலா 2 சே.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்காக எச்சரிக்கை

ஜூன் 28ம்(இன்று) தேதி மத்திய கிழக்கு, வடகிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, கேரளா, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 29ம் தேதி மத்திய கிழக்கு, வடா கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ. வேகத்தில் வீசும். ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Showers ,districts ,Tiruvallur ,Chennai , Chennai, Weather Center, Rain, Tamil Nadu
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...