பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூரு குமாரசாமி லே-அவுட் பகுதியில் வசிக்கும் மூதாட்டிக்கு, தனது 100வது பிறந்த நாளான கடந்த 18ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரது மகன், மருமகள், பேரக்குழந்தைகளுக்கும் கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த மூதாட்டிக்கு, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், அவர் 9 நாட்களில் குணமானார். வயதானவர்களுக்கு கொரோனா பாதித்தால் இறந்து விடுவார்கள் என்பதை இந்த 100 வயது மூதாட்டி முறியடித்துள்ளார். இது, பெரும் ஆச்சர்யத்தை அளித்துளளது.