திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரனார் பகுதியைச் சேர்ந்த சேஷாசலம்(65) அவரது மனைவி மல்லிகா(60) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சேஷாசலம் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த மல்லிகாவை எரித்துக் கொன்றார். மனைவியை தீ வைத்து சேஷாசலத்தை திருப்பத்தூர் டவுன் போலீஸ் கைது செய்துள்ளது.