×

ஒரே நாளில் 194 பேருக்கு தொற்று: மதுரையில் மேலும் 7 பேர் கொரோனாவுக்கு பலி

மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று மட்டுமே 7 பேர் பலியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்  மின்னல் வேகத்தில் கொரோனா பரவிவருகிறது.  நேற்று முன்தினம் ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்தனர். நேற்று ஒரே நாளில் 194 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதில் கொரோனா மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள், 10 செவிலியர்கள், 20 போலீசாருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், ஊரடங்கிற்கு முதல்நாளும், ஊரடங்கு அன்றும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் இருந்தவர்கள். மேலும், நேற்று ஒரே நாளில் அரசு கொரோனா மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையிலிருந்த 7 பேர் இறந்தனர். மேலும், தீவிர சிகிச்சை பெற்று வரும் 50க்கும் மேற்பட்டோர் அபாய கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரின் கார் டிரைவருக்கு தொற்று
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கார் டிரைவராக ஆரணியைச் சேர்ந்த வாலிபர் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதியான தகவலை அமைச்சரின் உதவி யாளரிடம் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அப்போது, ஆரணிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்த அமைச்சர் உடனடியாக இறங்கி வேறு காரில் சென்றார். டிரைவரை திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Tags : Madurai Madurai ,Corona , Madurai, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...