புதுடெல்லி: டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த 16ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவருடைய உடல்நிலை மோசமாக பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால், 19ம் தேதி சாகேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், குணமடைந்த அவர், நேற்று வீடு திரும்பினார்.