திருச்சி : திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மும்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணி 2021 ஜனவரிக்குள் முடிவடையும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பில் குடிமராமத்து பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில புதிய கதவணை கட்டப்படுகிறது என்றும் புதிய கட்டவணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளது என்றும் கூறினார்.