சென்னை :இந்திய-சீன எல்லை பிரச்சனையை மத்திய அரசு மர்மமான முறையில் கையாள்வதாக முன்னாள் காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் புகார் தெரிவித்துள்ளார். இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ராகுல்காந்தியின் எந்த கேள்விக்கும் ராணுவ அமைச்சரோ, பிரதமர் மோடியோ பதில் அளிக்கவில்லை, என்று கூறினார்.