×

சென்னையை வாட்டி வதைக்கும் கொரோனா: ராயபுரம் மண்டலத்தில் 7,000ஐ நெருங்கிய பாதிப்பு..கோடம்பாக்கம் உட்பட 4 மண்டலங்களில் 5000ஐ தாண்டியது!

சென்னை: சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ எட்டியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 47,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 27,986 பேர் குணமடைந்துள்ளனர். 694 பேர் உயிரிழந்துள்ளனர். 18,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1183 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.18 சதவீதம், பெண்கள் 39.82 சதவீதம். மண்டலம் வாரியாக பார்க்கும்போது, ராயபுரத்தில் 6,951 பேர், தண்டையார்பேட்டையில் 5,717 பேர், தேனாம்பேட்டையில் 5,534 பேர், கோடம்பாக்கத்தில் 5,216 பேர், அண்ணாநகரில் 5,260 பேர், திருவிக நகரில் 3,981 பேர், அடையாறில் 2,922 பேர், வளசரவாக்கத்தில் 2,058 பேர், திருவொற்றியூரில் 1,787 பேர், அம்பத்தூரில் 1,859 பேர், மாதவரத்தில் 1,395 பேர், ஆலந்தூரில் 1,149 பேர், பெருங்குடியில் 928 பேர், சோழிங்கநல்லூரில் 984 பேர், மணலியில் 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Riding Chennai ,Raipur ,area ,Rayapuram , Chennai, Corona, Royapuram, Kodambakkam, Corporation
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி