×

திருப்பதியில் கூடுதலாக 3 ஆயிரம்ரர ரூ.300 டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோயிலில் ₹300க்கான தரிசன டிக்கெட் கூடுதலாக 3 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ₹300 சிறப்பு தரிசனத்திற்காக வரும் 30ம் தேதி வரை தினசரி 6 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி சர்வ தரிசனத்திலும் 3,750 பேர் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை(சனி) முதல் வரும் 30ம் தேதி வரை ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வகையில் தினசரி கூடுதலாக 3 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தினந்தோறும் ₹300 சிறப்பு தரிசனத்தில் 9,000 பக்தர்கள், இலவச தரிசனத்தில் 3,750 பக்தர்கள் என மொத்தம் 12,750 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Tags : Rs ,Tirupati , additional,3 thousand,Rs.300 tickets,Tirupati
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...