×

மனித குலத்தை அச்சுறுத்தும் கொரோனா : ராயபுரத்தில் 7,000ஐ நெருங்கும் பாதிப்பு; 15 மண்டலங்களிலும் அசுர ஆட்டம் ; மாநகரில் இன்று மட்டும் 31 பேர் பலி

சென்னை, : சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ தாண்டியது. சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ எட்டியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 45,814 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 26,472 பேர் குணமடைந்துள்ளனர். 668 பேர் உயிரிழந்துள்ளனர். 18,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1139 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.25 சதவீதம், பெண்கள் 39.75 சதவீதம்.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது, ராயபுரத்தில் 6,837 பேர், தண்டையார்பேட்டையில் 5,531 பேர், தேனாம்பேட்டையில் 5,316 பேர், கோடம்பாக்கத்தில் 4,908 பேர், அண்ணாநகரில் 4,922 பேர், திருவிக நகரில் 3,896 பேர், அடையாறில் 2,777 பேர், வளசரவாக்கத்தில் 1,957 பேர், திருவொற்றியூரில் 1,755 பேர், அம்பத்தூரில் 1,741 பேர், மாதவரத்தில் 1,383 பேர், ஆலந்தூரில் 1,124 பேர், பெருங்குடியில் 916 பேர், சோழிங்கநல்லூரில் 894 பேர், மணலியில் 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6, ஸ்டான்லியில் 10, ஓமந்தூரார் மருத்துவமனையில் 7, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


Tags : Raipur ,Corona ,city ,zones , Chennai Corporation, Resource Development, Raipur, Kodambakkam, Corona
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி