×

போலி டிவிட்டர் கணக்கு மூலம் வைகோ பெயரில் அவதூறு பதிவு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் மதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த நன்மாறன் மற்றும் சுரேஷ் ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில், தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்குகள் தொடங்கி தனக்கும் தன் கட்சிக்கும், தனது தோழமை கட்சிகளுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலி டிவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Vaiko , Fake Twitter account, Vigo, slander post
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...