×

ஊராட்சி தலைவிக்கு கொரோனா

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியம் சென்னீர்குப்பம் ஊராட்சியில் 49 வயது பெண் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். அதிமுகவை சேர்ந்த இவர், அந்த பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டதால், ரத்த பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,panchayat , Head of the Panchayat, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...