×

வாகன சோதனையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மூக்கை உடைத்த போதை ஆசாமிகள் 2 பேர் கைது

அண்ணாநகர்: முழு ஊரடங்கு காரணமாக சென்னை முழுவதும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு  கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் அருகே ஐசிஎப் காவல் நிலைய போக்குவரத்து ஆய்வாளர் குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை போக்குவரத்த போலீசார் மடக்க முயன்றனர். கட்டுப்பாட்டை இழந்த பைக் போக்குவரத்து ஆய்வாளர் குமரன் மீது மோதியது. இதில் ஆய்வாளர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

விபத்தில் ஆய்வாளருக்கு இரண்டு காலிலும் காயம் ஏற்பட்டது.  மூக்கு எலும்பு உடைந்து ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், 2 வாலிபர்களையும் அண்ணா நகர் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில்  கொளத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவன் விஜய் (24), வில்லிவாக்கம் சேர்ந்த ஜெய்குமார் (21) என்பது தெரிந்தது. நண்பர்களான இவர்கள் மது போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. அவர்கள் மீது, முழு ஊரடங்கை மதிக்காமல் வாகனத்தில் சுற்றியது, முககவசம் இல்லாதது, விபத்து ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Inspector , Vehicle inspection, inspector, arrest
× RELATED ரேசன் அரிசி பதுக்கியவர் கைது