நெய்வேலி: நெய்வேலி அருகே பேருந்தில் சென்ற தம்பதியருக்கு கொரோனா உறுதியானதை அறிந்த சகபயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். கொரோனா பரிசோதனை செய்துக்கொண்ட தம்பதியர் பேருந்து ஒன்றில் சென்றபோது செல்போனில் வந்த தகவலை அறிந்த பேருந்து நடத்துனர் உள்பட அனைவரும் பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்துள்ளனர்.