காஞ்சிபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மிலிட்டரி ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி கமலநாதன் தலைமையிலும், செவிலிமேட்டில் நகர நிர்வாகி சங்கர் தலைமையிலும், காஞ்சிபுரம் நகராட்சி 33வது வட்டத்தில் நிர்வாகி பி.வி.சீனிவாசன் தலைமையிலும், 32வது வட்டத்தில் நகர நிர்வாகி மூர்த்தி தலைமையிலும், பெரிய காஞ்சிபுரத்தில் சுந்தரமூர்த்தி தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர குழு ஸ்டாலின், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், ராஜேந்திரன், ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.