காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,070 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 514 பேர் குணமடைந்துள்ள நிலையில் 546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.