×

தேமுதிக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

புழல் : செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தயாநிதி (38). பெயிண்டர். இவர் புழல் ஒன்றிய தேமுதிக ஒன்றிய துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தயாநிதி, நேற்று பிற்பகல் 11.30 மணியளவில் வீட்டுக்கு குடிநீர் எடுத்துச் செல்வதற்காக கண்ணம்பாளையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகிலுள்ள பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல்  அங்கு வந்தனர்.

குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த தயாநிதியை அரிவாளால் இரண்டு கைகள் மற்றும் உடலில் சரமாரியாக வெட்டி விட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர்.  இதில், படுகாயமடைந்த தயாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.


Tags : administrator ,persons , Puzhal ,DMDK ,unidentified persons
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயகுமாரின்...