இதைதொடர்ந்து நீர்வளத்துறை மேம்பாட்டு குழு சார்பில் இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், இந்த திட்ட பணிக்கென ₹161 கோடி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி சென்னையில் இருந்து சுமார் 110 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த ஏரியில் இருந்து 30 கிலோ மீட்டர் பரப்பளவில் நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளது. இந்த கழுவேலி தண்ணீரை சுத்திகரிக்க, அங்கேயே ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், ஏரியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், ரெகுலேட்டர் வைத்து தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. மேலும், அந்த ஏரி முழுவதும் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஏரியில் 6 டிஎம்சி வரை சேமித்து வைக்க முடியும். இந்த ஏரி மூலம் ஆண்டுக்கு 2 டிஎம்சி அளவுக்கு சென்னையின் குடிநீர் தேவைக்கு பெற முடியும். தற்போது, டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிக்ககப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.