×

பூதப்பாண்டி அருகே சாலையோரம் கொரோனா கவச உடை வீச்சு

பூதப்பாண்டி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்புக்காக கவச உடை அணிகின்றனர். ஆரல்வாய்மொழி நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவ்வையார் அம்மன்கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் ெவள்ளை நிறத்தில் துணி போன்ற ஒரு பொருள் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் என்ன வென்று பார்த்த போது கொரோனா தொற்று தடுப்பு கவசஉடை என தெரியவந்தது.

கவச உடை கிடந்த இடத்தின் அருகே பல வீடுகள் உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருவோருக்கு, ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சுகாதரதுறை  பணியாளர்கள் கவச உடை அணிந்து சளி மாதிரிகள் எடுக்கின்றனர். அவர்களில் யாராவது இந்த வழியாக செல்லும்போது கவச உடையை போட்டு சென்று இருக்கலாம் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கருதுகின்றனர். இதனால் இந்த கவச உடையை பாதுகாப்பாக அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Tags : Roadside Corona ,Poothapandi ,range , Magnifying glass, roadside, corona, armored dress
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...