டெல்லி: தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்பட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று 21 மாநில முதலமைச்சருடன் ஆலோசித்த நிலையில் தற்போது 2-ம் கட்டமாக தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுடன் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் லடாக் எல்லை மோதலில் வீரமடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்பட 15 மாநில முதல்வர்களும் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.