முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் முகமது மைதீன் மற்றும் நிர்வாகிகள் நேற்று முத்துப்பேட்டையில் உள்ள வர்த்தகக்கழகம், வர்த்தகக்சங்கம், பெரியக்கடைதெரு வர்த்தகக்கழகம் நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அனிவது கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் மக்கள் வெளியில் அதிகம் நேரம் கூடுவதையும் தடுக்கும் விதமாகவும் இதன் மூலம் தொற்று ஏற்ப்படுவதை தவிர்க்கும் வகையில் வணிக நிறுவனங்களை தினந்தோறும் ஊரடங்கு காலம் வரை மாலை 5மணிக்கு அடைத்து கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மனு குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்தனர்.