×

பாகிஸ்தானில் ஒரே நாளில் முதல் முறை 6,825 பாதிப்பு

பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் முதல் முறையாக 6,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 1,39,230 ஆகவும் பலி எண்ணிக்கை 2,632 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 51,735 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இரண்டு பெரிய மாகாணங்களான பஞ்சாபில் 52,601, சிந்துவில் 51,518 பேரும் வைரசால் பாதித்துள்ளனர். இதையடுத்து கைபர்-பக்துன்க்வாவில் 17,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 29,546 ஆய்வுகளுடன் இதுவரை 8,68,565 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

Tags : Pakistan , 6,825 casualties , Pakistan overnight
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...