திண்டுக்கல்: பழனி தாளையம் அருகே தீரன் பாணியில் வீடு புகுந்து கத்தி முனையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வாயி்ற்கதவை அரிவாளால் வெட்டி உள்ளே நுழைந்த 10க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் நாயை வெட்டியுள்ளனர். வீட்டில் இருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 20 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.