×

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மயங்கிய நிலையில் நடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானகுமார்(46), இவர், மாடம்பாக்கத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி(40). இருவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தனர்.

இதில் அவரது மகள் நந்தினி கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அவரது அம்மா பரமேஸ்வரி ரத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல்,, அவரது தந்தை சந்தானகுமார் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு பரமேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தானகுமார் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருக்கும்போது பரமேஸ்வரியை யாராவது இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார்கள்? அல்லது வேறு ஏதாவது காரணமா என அவரது கணவரிடம் துருவி துருவி தீவிரமாக விசாரித்தனர். அப்போது, அவரது கணவரே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதில், எதற்காக பரமேஸ்வரியை சந்தானாகுமார் கொலை செய்தார் என்பது குறித்து மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Thailavaram ,Matravancheri ,Dramatia ,Mudravancheri ,Taylawari ,Chandanakumar ,Ambedkar Nagar, Chengalpattu District, Uttaravancheri ,Madambakkam ,
× RELATED சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு