×

தற்கொலைகளை முதல்வர் யோகி கண்டுகொள்வது இல்லை

புதுடெல்லி: ‘உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டு  கொள்வதில்லை,’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி  வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் வருமானம் இல்லாததாலும், குடும்பத்தை நடத்த முடியாததாலும்  தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உத்தரப் பிரதேச முதல்வரும், அதிகாரிகளும்  தினமும் திட்டங்கள் தயாரிப்பது குறித்து பேசி வருகின்றனர். ஆனால், அவர்களின் இத்திட்டத்தில் விவசாயிகளுக்கும், புலம் பெயர்  தொழிலாளர்களுக்கும் இடம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. புலம் பெயர் தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,’ என  குறிப்பிட்டுள்ளார்.


Tags : Yogi ,Suicides , Yogi, Chief Minister , Suicides, found
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி