×

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்த மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல்: கர்நாடகத்தில் தனிமை முகாமில் இருந்தவர்கள் வெறிச்செயல்

பெலகாவி: கர்நாடகாவில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற மருத்துவ குழுவினர் மீது தனிமை முகாமில் இருந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மரன்ஹோலா என்ற கிராமத்தில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மாநில எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் மராட்டியத்தில் இருந்து திரும்பிய 2 குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவினர் சென்றபோது தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று கூறி அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தனிமை முகாமில் இருந்தவர்கள் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த நிலையில், உள்ளூர் மக்களும் இணைந்து தாக்குதல் நடத்தியதால் அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் தனிமை முகாமில் இருந்த 4 பேர் மற்றும் உள்ளூரை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Attack ,examination ,village ,warriors ,Corona ,Karnataka ,Belagavi , Corona, Medical Staff, Attack, Karnataka, Belagavi
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...