சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு சிகிச்சை பெற போதிய வசதி இல்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உட்பட 42 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு அயனாவரம் ஈ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனி அறை, கழிவறை போன்ற வசதிகள் இல்லாததால் பல மருத்துவர்கள் வீட்டு தனிமைக்கு மாறிவிட்டனர்.