×

கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் கட்டுப்பாடுகள் கடுமையாகலாம்: ஜி.கே.வாசன் எச்சரிக்கை

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பல மாவட்டங் களில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அது இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும், பயமும் எழுகின்றது.  மக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்.  தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.   3.5 லட்சம் பேர் நோய் கண்காணிப்பில் உள்ளார்கள் என்பது தகவல். அவர்கள் அனைவரும் குணம் பெற வேண்டும். அடுத்து எவருக்கும் பாதிப்பு வரக் கூடாது. கட்டுபாடுகள் மேலும் கடுமையாக்கக் கூடிய சூழல் எழுந்தாலும் எழலாம்.  அவற்றையும் நாம் கடைபிடிக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆகவே எல்லோரும் இணைந்து செயல்படுவோம். எதிர்மறைக் கருத்துக்களைத் தவிர்ப்போம். வதந்திகளைப் புறக்கணிப்போம், . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : GK Wasson , Corona, GK
× RELATED குரூப்-4 தேர்வில் முறைகேடு...