×

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 9 பேருக்கு கொரோனா.:9 பேரும் அரக்கோணம் எம்.டி.ஆர்.எப்.வீரர்கள்

அரக்கோணம்: அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் மகன் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அம்பன் புயல் பாதித்த மேற்கு வங்கத்தில் மீட்டு பணியில் ஈடுப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 50 பேர் அரக்கோணத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக சென்றனர்.

மீட்பு பணிகளை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய 50 வீரர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 41 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து அரக்கோணம் வந்த காவல் ஆய்வாளர் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பன் புயல் தாக்கியபோது ஒடிசாவில் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு இருந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 49 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் அதிர்ச்சி அடங்குவதற்குள் தமிழக வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : 9 National, Disaster, Rescue, Coroners.
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...