புதுடெல்லி: ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 35 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.