வேலூர்: வேலூர் மத்திய சிறையில் 11வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஜூன் 1 முதல் அவர் தம் உண்ணாவிரதத்தை தொடங்கினார். பெண்கள் சிறையில் உள்ள மனைவி நளினியுடன் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டு அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் உள்ள தனது தாயுடன் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டும் முருகன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.