சென்னை: ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று முதல் 3 நாட்களுக்கு கழக கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடுமாறும், அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மறைவெய்தினார். அவரது மறைவினையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழக கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விடுமாறும், அனைத்து நிகழ்ச்சிகளையும் 3 நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.