தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆன்-லைன் வழக்கு விசாரணையின் போது ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. சாலையோரத்தில் நின்று வழக்கறிஞர் ஒருவர் ஜாமீன் வழக்கில் வாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற கார் சத்தத்துடன் சென்றதால் உணர்ச்சி வசப்பட்ட வழக்கறிஞர், ஓட்டுனரை திட்டியுள்ளார். வழக்கறிஞர் ஆபாசமாக திட்டியதை ஆன்-லைனில் கேட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நீதிபதி ரூ.100 அபராதம் விதித்தார். வழக்கறிஞர் குறித்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் நீதிபதி புகார் தெரிவித்துள்ளார்.