மும்பை: ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் அதிகரித்து 34,247 புள்ளிகளானது. 393 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 2,290 புள்ளிகள் உயர்வுடன் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 10,116 புள்ளிகளில் முடிவு பெற்றது.