×

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக்கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு திமுக தலைமை வேண்டுகோள்

சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெ.அன்பழகன். இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 2ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 பிறந்த நாள் ஆகும்.

இந்நிலையில் திமுக தலைமை கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,

சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் - சேப்பாக்கம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஜெ.அன்பழகன்அவர்கள் இன்று (10.6.2020) காலை சென்னை, தனியார் மருத்துவமனையில்
மறைவெய்தினார்.அவரது மறைவினையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (10.6.2020)முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக்கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : organizations ,Tamil Nadu ,DMK ,pillars , Systems, levers, half pole, fly, DM, leadership, request
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...