டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்வதன் மூலம் அனைவரையும் அடையாளம் கண்டறிய வேண்டும் என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பது பற்றிய திட்டத்தை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.