×

பைக்கில் சென்ற சார் பதிவாளரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

ஆலந்தூர்: மடிப்பாக்கம் சங்கர நாராயணன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (57). ராயப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சப்-ரிஜிஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் மாலை பணிமுடிந்து இரு சக்கர வாகனத்தில் தனது வீடுநோக்கி   சென்றுகொண்டிருந்தார். கிண்டி சிட்டி லிங்க் சாலை வழியாக சென்றபோது காற்றாடி விடும் மாஞ்சா நூல் அவரது கழுத்தை இறுக்கியது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மேலும், மாஞ்சா நூல் அவரது கழுத்தை இறுக்கியதில் கழுத்து வீங்கி காயம் ஏற்பட்டது.

உடனடியாக, பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிண்டி  போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெங்கட்ராமன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காற்றாடி பறக்க விட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Tags : sir registrar ,registrar , Sir Registrar, Manja Yarn
× RELATED ஆவணங்களின் எண்ணிக்கை, வருவாய்...