சென்னை: தென்கிழக்கு அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை புயல் உருவாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை நாளை வலுப்பெறும் என கூறப்படுகிறது. நாளை காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மறுநாள் புயலாக உருவெடுக்கும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.