சென்னை: சென்னை காந்தி மண்டபம் அண்ணா பல்கலைக்கழக அலுவலர் குடியிருப்பை சேர்ந்த 45 வயது நபர், அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருந்ததால் கடந்த 24ம் தேதி திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பரிசோதனை கூடத்தில் பிசிஆர் பரிசோதனை செய்தார். பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் பிசிஆர் பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவரது வீட்டின் அருகே உள் சூப்பர் மார்க்கெட் மற்றும் அதன் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.