நெல்லை : சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.இந்தியாவின் கடைசியாக பட்டம் கட்டிய அரசர் என்ற பெருமை கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி(92) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.