×

சென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

சென்னை: சென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ரஞ்சித் என்பவரை காரில் சென்றவர் இடித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு காரின் மேல் விழுந்துள்ளார். ரஞ்சித் காரின் மேல் இருப்பது தெரியாமல் காரை ஓட்டிச் சென்ற கணேச மூர்த்தியை போலீஸ் மடக்கியது. கணேச மூர்த்தியை கைது செய்த போலீசார் ரஞ்சிதை மீட்டு கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்தனர். 


Tags : skyline ,Chennai , One killed, car , two wheeler collide , Chennai skyline
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...