சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட 12 பேரும் தலா ரூ.10,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும், தலைமறைவாகக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.