×

சுகாதாரத்துறை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை:  கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்புப் பணியில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது மற்றும் அதன் ஆலோசனைகள் ஏற்கப்படாதது தான் நோய் பெருந்தொற்று பரவி வருவதற்கு காரணமாகும். பொது சுகாதாரத்தில் ஏற்பட்ட அவசரநிலை  காலத்தில், சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட முடியாத, ஆலோசனைகளை கேட்காமல் அலட்சியம் செய்த நோய் பரவலுக்கு காரணமானோர் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.   


Tags : health department , Department of Health, Mutharasan, Corona, Curfew
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...