சென்னை: தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தருவது பற்றி விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு சூழல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் திரையரங்குகளுக்கு அனுமதி தருவது பற்றியும் உரிய நேரத்தில் முதல்வர் முடிவு செய்வார் என அவர் தெரிவித்துள்ளார்.