×

மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்கில் 58.33 கோடி டெபாசிட்

சென்னை:  சாலையோரம் வசிப்போர், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை உள்பட பல்வேறு உதவிகளை செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 449 மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கில் 58.33 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஊரடங்கு நிவாரணமாக  1000 மற்றும் ரேசன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags : account holders ,bank ,bank account holders , Alternatives, Bank Account
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...