×

சீடர்கள் முதல் பூசாரி வரை.. கோயிலுக்குள் பெண்களை சிறைப்பிடித்து கொடூரம்!! :அமிர்தசரஸை உலுக்கிய பாலியல் வன்கொடுமை!!

சண்டிகர் : புகழ்பெற்ற அமிர்தசரஸ் நகரின் அருகில் உள்ள ராம் தீரத் கோயிலின் தலைமைப் பூசாரி மற்றும் மற்றொரு பூசாரியும் சேர்ந்து இரண்டு பெண்களை சிறைப்பிடித்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.ஊரடங்கில் பெண்கள் மீதான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  பட்டியல் இனத்தின் பஞ்சாப் ஆணைய உறுப்பினர் தர்செம் சிங் சியால்கா, புகார் ஒன்றை அமிர்தசரஸ் போலீஸிடம் கொடுத்தார். அதில், `அமிர்தசரஸ் நகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள ராம் தீரத் கோயிலில் இரண்டு பெண்களை அக்கோயிலின் தலைமை பூசாரியும் மற்றொரு பூசாரியும் சேர்ந்து அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் மே 18-ம் தேதி அக்கோயிலின் உள்ளே அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தியது போலீஸ். அதில் வன்கொடுமைச் சம்பவம் நடந்தது உண்மை என்பது தெரியவந்தது. ஆசிரமத்தில் அடைக்கப்பட்டிருந்த 25 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவரையும் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராம் தீரத் கோயிலின் தலைமைப் பூசாரி மற்றும் மற்றொரு பூசாரியும் சேர்ந்து இந்த இரண்டு பெண்களையும் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்தனர் என்று அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளனர்.

பூசாரி முதல் சீடர்கள் வரை

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் பூசாரிகளிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆசிரமத்துக்கு வந்துள்ளார். அங்கு இருந்த சூரஜ் நாத், நச்சதர் நாத் ஆகிய சீடர்கள் இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை பூசாரி கிர்தாரி நாத் மற்றும் வருந்தர் நாத் ஆகியோரிடம் புகாரளிக்க சென்றுள்ளனர்.

ஆனால் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இருவரையும் அடைத்து வைத்து அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்களின் செல்போன்களையும் பிடுங்கி வைத்துக்கொண்டு  கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் அங்கிருந்த போன் ஒன்றை திருடி தனது அண்ணனுக்கு தகவல் தெரிவிக்க தற்போது போலீசார் தலைமை பூசாரி மற்றும் சீடர்கள் ஆகியோர் மீது 376, 379, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Tags : disciples ,priest ,Amritsar ,women , Disciples, Priest, Temple, Women, Captives, Torture, Amritsar, Sexual Abuse
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...