×

புழல் அருகே விபத்தில் வாலிபர் பலி

புழல்: புழல் அடுத்த புத்தகரம் இந்திரா நகர், 5வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (38)  லாரி ஓட்டுநர். நேற்று காலை இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிலிருந்து மதுரவாயல் செல்வதற்காக புழல்-கதிர்வேடு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் சென்ற லாரி பார்த்திபன் மீது உரசியது. இதில் அருகில் உள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் தலை மீது ஏறியது. பலத்த காயமடைந்த பார்த்திபனை  அருகில் உள்ளோர் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பார்த்திபன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மணலியை சேர்ந்த ராஜவேலு (38) என்பவரை கைது செய்தனர்.


Tags : crash ,Pullam ,accident , Youth killed , accident, Puzhal
× RELATED இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பாஜக நிர்வாகி பலி..!!