ராமேஸ்வரம்: மத்திய நிதி அமைச்சர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடியில் ஏழை மக்களுக்கு எதுவும் பயனில்லை என்பதால் அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10000 நிவாரணம் வழங்ககோரியும் ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் டாஸ்மார்க் கடைகளின் நேரத்தை அதிகபடுத்தியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பி உள்ளனர்.