×

மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு 546 ஆக உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சி உட்பட பல ஒன்றியங்களில் மொத்தம் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, 18 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. இது மாநில அளவில் இரண்டாம் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். மேலும், 178 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மற்ற 363 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.   



Tags : Coronation , Corona, Curfew, Thiruvallur
× RELATED தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக...