சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலக அனைத்துத்துறை பணியாளர்கள் பேருந்தில் சொந்த செலவில் டிக்கெட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும். 18ம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளதாக அரசு அறிவித்திருந்தது.